தலைமன்னாரில் கேரளா கஞ்சாப்பொதிகள் மற்றும் போதை மாத்திரைகள் மீட்பு-சந்தேக நபர் ஒருவர் கைது-(படம்)
தலைமன்னாரில் இருந்து நேற்று (16-11-2017)புதன் கிழமை இரவு கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேரூந்தில் இருந்து சுமார் 21 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு,கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் இருந்து ஒரு தொகை போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக போசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-தலைமன்னாரில் இருந்து நேற்று புதன் கிழமை(15) இரவு 9.15 மணிக்கு கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேரூந்து ஒன்றில் கஞ்சாப்பொதிகள் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
-இந்த நிலையில் மன்னார் பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக பேசாலை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஆர்.டி.எம்.சிறில் தலைமையில்,உதவி பொலிஸ் பரிசோதகர் ஜி.ஜி.பிரியந்த மற்றும் பொலிஸ் சார்ஜன்,பொலிஸ் கொஸ்தபில்கள் அடங்கிய குழுவினர் நேற்று புதன் கிழமை(15) இரவு தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேரூந்தை வங்காலைப்பாடு சந்தியில் இடை மறித்து சோதனையிட்டனர்.
-இதன் போது குறித்த பேரூந்தில் இருந்து சுமார் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான 21 கிலோ 451 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதோடு பேரூந்தில் இருந்த நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
-கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் தலைமன்னாரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று பேசாலை பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
-அதன் போது குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 3440 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர்.
-தற்போது குறித்த சந்தேக நபர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றார்.
விசாரனைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதோடு, மீட்கப்பட் ட கஞ்சாப்பொதிகள் மற்றும்,போதை மாத்திரைகள் என்பன மன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பேசாலை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
-தலைமன்னாரில் இருந்து நேற்று புதன் கிழமை(15) இரவு 9.15 மணிக்கு கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேரூந்து ஒன்றில் கஞ்சாப்பொதிகள் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
-இந்த நிலையில் மன்னார் பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக பேசாலை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஆர்.டி.எம்.சிறில் தலைமையில்,உதவி பொலிஸ் பரிசோதகர் ஜி.ஜி.பிரியந்த மற்றும் பொலிஸ் சார்ஜன்,பொலிஸ் கொஸ்தபில்கள் அடங்கிய குழுவினர் நேற்று புதன் கிழமை(15) இரவு தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேரூந்தை வங்காலைப்பாடு சந்தியில் இடை மறித்து சோதனையிட்டனர்.
-இதன் போது குறித்த பேரூந்தில் இருந்து சுமார் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான 21 கிலோ 451 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதோடு பேரூந்தில் இருந்த நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
-கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் தலைமன்னாரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று பேசாலை பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
-அதன் போது குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 3440 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர்.
-தற்போது குறித்த சந்தேக நபர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றார்.
விசாரனைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதோடு, மீட்கப்பட் ட கஞ்சாப்பொதிகள் மற்றும்,போதை மாத்திரைகள் என்பன மன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பேசாலை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னாரில் கேரளா கஞ்சாப்பொதிகள் மற்றும் போதை மாத்திரைகள் மீட்பு-சந்தேக நபர் ஒருவர் கைது-(படம்)
Reviewed by Author
on
November 16, 2017
Rating:
No comments:
Post a Comment