அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் மாணவன் A.சீசர் குருஸ் வர்த்தகப்பிரிவில் 01ம் இடம்..


க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இம்முறை இணையத்தில் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளுக்கமைய உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய...

மன்னார் மாவட்டத்தின் மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் மாணவன் A.சீசர் குருஸ் வர்த்தகப்பிரிவில் 01 ம் இடத்தினை மாவட்ட ரீதியில் பெற்றுள்ளார். இவர் S.அடைக்கலம் குருஸ் S.சூசையம்மா   தம்பதிகளின் புதல்வர்


மாவட்ட ரீதியில் 01ம் இடம் பெற்ற மாணவன் செல்வன் A.சீசர் குருஸிடம் எதிர்கால இலக்கு என்று வினவியபோது...

தனது இலக்கு சிறந்த சட்டத்தரணியாக வரவேண்டும் என்பதே...

அத்துடன் தான் இந்நிலைக்கு முன்னேறக் காரணமாய் இருந்த  ஆசிரியர்கள் அதிபர் நண்பர்கள் குறிப்பாக பெற்றோர் சகோதரர்கள்  அனைவருக்கும் எனது நன்றிகள் விசேட விதமாக எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதமும் பெற்றோர்களின் ஆசீர்வாதமும் தான்.

செல்வன் A.சீசர் குருஸ் மாணவன்  ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர் அனைவரையும் நியூமன்னார் இணையக்குழுமம்  சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.

ஏனைய பரீட்சை முடிவுகளை உடனுக்குடன்  நியூமன்னார் இணையத்தில் எதிர்பாருங்கள்...


 தொகுப்பு- வை-கஜேந்திரன்-




மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் மாணவன் A.சீசர் குருஸ் வர்த்தகப்பிரிவில் 01ம் இடம்.. Reviewed by Author on December 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.