அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீதிமன்றத்தினால் 17 இந்திய மீனவர்கள் விடுதலை-உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு-(படம்)

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து மூன்று கட்டமாக தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 17 இந்திய மீனவர்களை இன்று வெள்ளிக்கிழமை 29-12-2017 மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

குறித்த 17 இந்திய மீனவர்களும் இன்று வெள்ளிக்கிழமை(29) மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது,சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த மீனவர்களை நீதவான் விடுதலை செய்தார்.

குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த 17 மீனவர்களையும்,குறித்த அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மன்னார் நீதிமன்றத்தினால் 17 இந்திய மீனவர்கள் விடுதலை-உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு-(படம்) Reviewed by Author on December 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.