அண்மைய செய்திகள்

recent
-

வங்காலை புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலய மாணவன் டெனிசியஸ் ஜென் ரெம்சியஸ் பெர்னாண்டோ இயற்பியல் கணிதப்பிரிவில் மாவட்ட ரீதியாக 1ம் இடம்....


க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை இணையத்தில் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளுக்கமைய

 மன்னார் மாவட்டத்தில் வங்காலை புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலய மாணவன் டெனிசியஸ் ஜென் ரெம்சியஸ் பெர்னாண்டோ  இயற்பியல் கணிதப்பிரிவில் 2A-B-C-Merit மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
.
இவர் வங்காலை 01வட்டாரத்தைச் சேர்ந்த திரு திருமதி டெனிசியஸ் ஆன் லக்சிக்கா தம்பதிகளின் புதல்வனாவார்.

மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தை பெற்ற மாணவன் டெனிசியஸ் ஜென் ரெம்சியஸ் பெர்னாண்டோ  எதிர்கால இலக்கு என வினாவியபோது.....

தனது இலக்கு  விண்வெளித்துறையில் சாதனை படைக்கவேண்டும் என்பதே  எனது கனவு ஆனால் அத்துறையானது. எமது நாட்டில் இல்லை முதலில் இத்துறையில் இயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவம் தேர்ச்சி பெற்று எனது இலக்கை ஒருநாள் அடைவேன்

அத்துடன் தான் இந்நிலைக்கு முன்னேறக் காரணமாய் இருந்த  ஆசிரியர்கள் அதிபர் நண்பர்கள் குறிப்பாக பெற்றோர் சகோதரர்கள்  அனைவருக்கும் எனது நன்றிகள் விசேட விதமாக எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதமும் பெற்றோர்களின் ஆசீர்வாதமும் தான்.


 இம்மாணவனையும் ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர் அனைவரையும் நியூமன்னார் இணையக்குழுமம்  சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.


 தொகுப்பு- வை-கஜேந்திரன்-

வங்காலை புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலய மாணவன் டெனிசியஸ் ஜென் ரெம்சியஸ் பெர்னாண்டோ இயற்பியல் கணிதப்பிரிவில் மாவட்ட ரீதியாக 1ம் இடம்.... Reviewed by Author on December 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.