-மன்னார் பேசாலை கொலை வழக்கு:- சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு-(படம்)
மன்னார் பேசாலை 8 ஆம்; வட்டாரத்தில் இடம் பெற்ற கொலையுடன் தொடர்பு பட்டவர் என்ற சந்தேகத்தின் கீழ் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை தொடர்ந்தும் எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று வெள்ளிக்கிழமை 29-12-2017 உத்தரவிட்டார்.
-குறித்த சந்தேக நபர் விசாரனைக்காக மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போதே விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மன்னார் பேசாலையிலுள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரனிஸ்லாஸ் நளீன் குரூஸ் (வயது -29) என்ற இளைஞன் கடந்த 8 ஆம் திகதி (8-12-2017) வெள்ளிக்கிழமை அவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
-குறித்த இளைஞனின் மரண விசாரனைகளின் போது இளைஞனின் கழுத்து பகுதி நெரிக்கப்பட்டதன் காரணத்தினாலேயே மரணம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்தது.
இந்த நிலையில் பேசாலை பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரனைகளை தொடர்ந்து உயிரிழந்த இளைஞருடன் குறித்த உடை விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்ததோடு குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் போது கொலைக்கு பயன் படுத்தப்பட்டதாக கூறப்படும் தடயப்பொருட்களும் மீட்கப்பட்டதோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், பொலிசார் கைப்பற்றிய சான்றுப் பொருட்களையும் மன்னார் நீதிமன்றில் கையளித்தனர்.
-இந்த நிலையில் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை(29) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும் மன்றில் முன்னிலையாகிய பேசாலை பொலிஸார் குறித்த கொலை தொடர்பில், மேலும் ஒரு நபரிலும் சந்தேகம் இருப்பதால் இவ் விடயமாக அந்த சந்தேகநபரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியிருப்பதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைக்காக காத்திருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
-மன்னார் பேசாலை கொலை வழக்கு:- சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு-(படம்)
Reviewed by Author
on
December 29, 2017
Rating:
No comments:
Post a Comment