அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் மோட்டைக்கடை இந்துமுன்பள்ளியின் 2017 ஆண்டிற்கான பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா....


நானாட்டான் மோட்டைக்கடை  இந்து முன்பள்ளியின் 2017 ஆண்டிற்கான பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழாவானது 14.12.2017 (வியாழன்) முகாமைத்துவ குழு தலைவர் திரு.கு.நாகநாதன் அவர்களின் தலைமையில் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய (மடத்தில்) காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

 ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய குருக்கள் மற்றும் பிரதம விருந்தினர் ஏனை அழைக்கப்பட்ட விருந்தினர்களின் மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக
ஜனாப். A.L.M. மதீன் (உதவிக்கல்விப்பணிப்பாளர் - முன்பள்ளி – மன்னார் வலயக்கல்வி அலுவலம்) அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக
திரு.A.Q.I. பெனான்டோ (அதிபர்- மன்/மோட்டைக்கடை அ.த.க.பா) திரு.S.ஆசைப்பிள்ளை (அதிபர் - மன்/நானாட்டான் ஆரம்பபாடசாலை)
திரு.N.S.J.லெம்பேட் (முகாமையாளர் - சமுர்த்தி வங்கி – நானாட்டான்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மற்றும் ஏனை முன்பள்ளி ஆசிரியர்கள் மாதர்கிராம சங்கங்களின் தலைவர்கள்  ஆலய சபையினர் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

பட்டம்பெற்ற 14 மாணவர்களும் தங்களின் சுயஅறிமுகத்தினை செய்திருந்தனர். இம் மாணவர்களின் கலைநிகழ்வுகள் சுபஅறிமுகம் என்பவற்றை ஆசிரியர்கள் திறம்பட ஒழுங்கமைத்திருந்தனர். 14 மாணவ்களுக்கு பட்டமளிப்பும் 22 மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு 11.30 மணியளவில் நிறைவுற்றது.
 








நானாட்டான் மோட்டைக்கடை இந்துமுன்பள்ளியின் 2017 ஆண்டிற்கான பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா.... Reviewed by Author on December 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.