அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா நகரில் குற்றச்செயல்களைக்கட்டுப்படுத்த சிறப்புத்திட்டம் ஆரம்பம்




வவுனியா நகர்பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் நகரின் முக்கிய பகுதிகளில் அதி விஸேட சி.சி.ரி கமறா பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்க்பபட்டுள்ளது.


வவுனியா வர்த்தகப்பிரமுகர்கள், வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழிநடத்தலில் இந்நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். வவுனியா வர்த்கப்பிரமுகர்கள் ஒன்றிணைந்து நகரின் முக்கிய பகுதிகளில் அதிவிஸேடமான சி.சி.ரி கமறாவினைப் பொருத்துவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டபோது இந்நடவடிக்கைக்கு இரண்டு மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் இப்பணத்தினை நகரிலுள்ள வர்த்தகப்பிரமுகர்களின் உதவியுடன் செய்து முடிப்பதற்கான வேலைத்திட்டத்தினை மேற்கொண்டு ல்பணம் சேகரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றது.


எனவே இந்நடவடிக்கைக்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்களலான உதவிகளை வழங்குமாறும் இந்நடவடிக்கை நாளை எங்களுக்கு பேருதவியாக இருப்பதுடன் குற்றச் செயல் புரிபவர்களை கைது செய்வதற்கும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நடவடிக்கையினை அடுத்து நகரில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள், திருட்டுச்சம்பவங்கள், வழிப்பறிப்பு நடவடிக்கைகள், கடத்தல்கள், வாள்வெட்டுச்சம்பவம் போன்ற குற்றச் செயலை தடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதுடன் இந்நடவடிக்கை முழுக்க வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அலுவலகம் மேற்கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


வவுனியா நகரில் குற்றச்செயல்களைக்கட்டுப்படுத்த சிறப்புத்திட்டம் ஆரம்பம் Reviewed by Author on December 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.