நிர்ணய விலைக்கு மேலதிகமாக விற்பனை செய்வோரை முற்றுகையிட நடவடிக்கை! -
நிர்ணய விலைக்கு மேலதிகமாக தேங்காய், கருவாடு, பருப்பு முதலியவற்றை விற்பனை செய்வோரை முற்றுகையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகவர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சபை கூறியுள்ளது.
இதன்படி, சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் வர்த்தகர்களுக்கு தகவல்களை தெரிந்துகொள்வதற்கும், ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குமான காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவிதுள்ளது.
நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நேற்று நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகார சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 75 ரூபாவாகவும், கருவாடு ஒரு கிலோவிற்கான ஆகக்கூடிய சில்லறை விலை 1,000 ரூபாவாகவும், மைசூர் பருப்பு ஒருகிலோவிற்கான சில்லறை விலை 130 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிர்ணய விலைக்கு மேலதிகமாக விற்பனை செய்வோரை முற்றுகையிட நடவடிக்கை! -
Reviewed by Author
on
December 08, 2017
Rating:
No comments:
Post a Comment