அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பில் நடந்த அதிசயம்! படையெடுக்கும் மக்கள் -


இலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றில் இயேசு நாதரின் உருவத்திலிருந்து வியர்வைத் துளிகள் வடிந்து வருகிறது.
வத்தளை - சென்.அன்டனிஸ் தேவாலயத்திலுள்ள இயேசு நாதரின் உருவம் பொறிக்கப்பட்ட புகைப்படத்திலேயே வியர்வை வடியும் அதிசயம் இடம்பெற்றுள்ளது.
இந்த அதிசயத்தைக் காண பெருந்திரளான பக்தர்கள் தேவாலயத்தை நோக்கி படையெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர் போன்று வடியும் இந்த திரவம் வியர்வைக்கு சமமானதாக உள்ளதெனவும், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இவ்வாறு புகைப்படத்தில் இருந்து வியர்வைத் துளிகள் வடிந்து வருவதாக வத்தளை தேவாலய வணக்கத்துக்குரிய அருட்தந்தை சன்ஜீவ் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
வியர்வை வடியும் புகைப்படம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின், சாலக்குடி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
கண்ணீர் போன்ற நீர்த்துளிகள் வடியும் இந்த படம் ஆரம்பத்தில் நிரோமி அமரசிங்க என்ற பெண்ணின் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாக அருட்தந்தை மென்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கைக்கு மாறான நிகழ்வு ஏற்பட்ட பின் இந்தப் படம் தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வப்போது இயேசு நாதரின் நெற்றியில் இருந்து வியர்வைத் துளிகள் வடிந்ததாக நிரோமி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் உரிய முடிவுக்கு தற்போது வர முடியாது. இது தொடர்பில் அறிவியல் விளக்கம் இருக்கலாம். ஆனால் யாரால் அதை நிரூபிக்க முடியும் என்று எனக்கு தெரியாதென அருட்தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த அதிசயம்! படையெடுக்கும் மக்கள் - Reviewed by Author on December 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.