அண்மைய செய்திகள்

recent
-

ஊன்றுகோள் தேவைப்படும்-உழைப்பாளிகளே.....தலைமைகளே



முந்தி இப்படி இல்ல
சந்தி சிரிக்குது இப்ப- தமிழ் தலைமை
மந்திகளால்-புரியவில்லை
குந்தி இருக்கினம் தமிழர் உரிமைகளில்

யுத்தம் முடிந்தது
உத்தமர்களின் உயிர்தியாகம்
உரிமையின் குரல்-தமிழரின்
உலகறியும் நிலமை

சொல்லும் பொருளுமய்
வெல்லும் வரைக்கும்
சொல்லித்தீர்க்கும் உரிமையும் போரும்
எல்லாம் மறந்து-இப்போது

கூடியிருந்தால் கோடி நன்மை
கூட்டமைப்பு கேடிகளின் -கையில்
கூட்டிக்கழிக்க வேண்டிய குப்பைகள்-இன்னும்
கூட்டமாய் கூட்டமைப்புக்குள்-கும்மியடிக்கினம்

முதலில் கட்சி
இடையில் பதவி ஆட்சி
சொல்லும் பொருளுமாய்
சொல்லித்தீர்க்கும் உரிமையும் போரும்
வெல்லும் வரைக்கும்
எல்லாம் மறந்து-இப்போது

கூடியிருந்தால் கோடி நன்மை
கூட்டமைப்பு கேடிகளின் -கையில்
கூட்டிக்கழிக்க வேண்டிய குப்பைகள்-இன்னும்
கூட்டமாய் கூட்டமைப்புக்குள்-கும்மியடிக்கினம்

முதலில் கட்ச்சி
இடையில் பதவி ஆட்ச்சி
பங்கீடு பிழை பணத்திற்காய்
பத்தாய் பிரிந்து-பல்லித்துதிரிந்து

எதிர்க்கட்சி தலைவர் பதவி
பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவர் பதவி
ஜனாதிபதி சட்டத்தரணி ஆலோசகர் பதவி
இன்னும் பல பதவிகளில்......இருந்தும்

ஒன்றும் இல்லாத போது
இருந்த ஒற்றுமை
இன்று   எல்லாம்  இருக்கும் போது
ஏன் வேற்றுமை.......

ஒன்றும் நடக்கவில்லை
ஒன்றும் கிடைக்கவில்லை-தமிழர்க்கு
தின்று தினம் அனைத்துசலுகைகளும்
மென்று நன்றாய் வாழும்-தமிழ்தலமைகளே
ஊன்றுகோள் தேவைப்படும்-உழைப்பாளிகளே

100 நாள் தீர்வு
2006 கிடைக்கும் தீர்வு
2017 கிடைக்கும் தீர்வு
இடைக்கால வரைவு
சட்ட வரைவு-எதுவந்தாலும்
வாய்ப்பேச்சில் பொய்சேர்த்து....

காணாமல் போனோர் பற்றி
காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி
சிறையில் வாடும் உறவுகள் பற்றி
வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பற்றி
விதவைப்பெண்கள் பற்றி பேசுவதற்கு ஒருபோதும் கூட வில்லை
உயர்மட்டக்குழு....உயர்மட்டக்குழு....உயர்மட்டக்குழு....

இன்று பரபரப்பு-
ஈழத்தமிழ்ர்களிடையே
இவர்களின் கூத்து
இந்திய திராவிட அரசியல் வாதிகளைவிட
இழிவான நிலையில்-மலிவு விலையில்

பிரித்தாளும் பெரும்பான்மையின் மகுடிக்கு
பிரிந்து ஆடும் கறுப்பாடுகளே
பிறந்த மண்ணின்  தமிழரின் பெருமையை
மறந்து திரியும் எருமைகளே...நடந்தவற்றை மறந்து விட்டு
நாடகமாடும் நரிக்கூட்டங்களே
நல்லாட்சி தான் இது என்று
நாக்கூசாமல்....

ஐயம் இன்றி
ஐ.நாவிலும் சொல்லிவிட்டு
ஐஸ்வரியமாய் தூங்கிடும்
ஐந்தறிவு ஜீவன்களே....

தேர்தல் காலங்களில் மட்டும்
புற்றீசல்கள் போல கிளம்பி- செயல்
புயலாய் வீசி....புரியாத வார்த்தை பேசி
புலம்மும் தமிழர்களிடமும்
புலம்பெயர்தமிழ்ர்களிடமும்

புதிய அவதாரமாய்
புதுப்பொலிவு காட்டி
பூசிமொழுகி-பூனைபோல வாளாட்டி
புரியாமல் தமிழர்களின் ஓட்டில்-வென்று...,,,!!!???

தமிழர்க்கு
வீடும்....
நாடும்....உரிமையும்
கிடைக்காது-இந்த நாய்கள நம்பி...நெஞ்சு பொறுக்குதில்லையே...


நியூமன்னார் இணையத்திற்காக
வன்னிமைந்தன்
 

ஊன்றுகோள் தேவைப்படும்-உழைப்பாளிகளே.....தலைமைகளே Reviewed by Author on December 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.