அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளியின் வருடாந்த மலரும் அரும்புகள் நிகழ்வுகள்.(படம்)

மன்னார் எமில் நகர் பூண்டி மாதா முன்பள்ளியின் வருடாந்த மலரும் அரும்புகள் நிகழ்வு  நேற்று சனிக்கிழமை(17) மாலை 2 மணியளவில் மன்னார் ஆகஸ் ஹோட்டலில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.செலின் சுகந்தி செபஸ்ரியன் , சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகரசபை செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட்,  'வேள்ட் விசன்' நிறுவன கல்வித் திட்ட இணைப்பாளர் .எம்.உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் எல்லோராலும் வியக்கும் வண்ணம்  சிறார்களின் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
மேலும் வருடத்தின் செயற்பாடுகள், முன்பள்ளியின் சூழல், எதிர்பார்க்கைகள் வீடியோ காட்சியாக காண்பிக்கப்பட்டதுடன், கண்கவர் நடனங்கள் முன்பள்ளி சிறார்களினால் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இடம்பெற்றது.

2018ம் ஆண்டு தரம் 1 செல்கின்ற சிறார்களுக்கு பட்டமளிப்பு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் சிறுவர்களுக்கு பல பரிசில்கள் வழங்கப்பட்டது. முன்பள்ளி ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

குறிப்பாக இம்முன்பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் இந்நிகழ்வினை சிறப்பாக நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
 



















சிறப்பாக இடம் பெற்ற மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளியின் வருடாந்த மலரும் அரும்புகள் நிகழ்வுகள்.(படம்) Reviewed by Author on December 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.