அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவின் 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெறுகின்றது.

வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 103 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1043 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒரு இலச்சத்து 14 ஆயிரத்து 599 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெறுகின்றது.

குறித்த தேர்தலில் 2000 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 1500 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவின் 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு Reviewed by NEWMANNAR on February 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.