42,000 பேர் நள்ளிரவில் சோதனை: பலர் கைது -
நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களின் மூலம் பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11 மணி தொடக்கம் இன்று அதிகாலை மூன்று மணி வரையில் ஆயிரத்து 300 இற்கு மேற்பட்ட வீதிச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 21 ஆயிரம் வாகனங்களையும் 42 ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்களையும் சோதனையிட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்போது சுமார் 14 கிராம் ஹெரோயினும் 11 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 3, 860 லீற்றர் மதுபானமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் 3, 700 இற்கு மேற்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
42,000 பேர் நள்ளிரவில் சோதனை: பலர் கைது -
Reviewed by Author
on
February 01, 2018
Rating:
No comments:
Post a Comment