ஒருவர் மதுவுக்கு அடிமையாவதற்கு 4 காரணங்களே உண்டு: அடித்துச் சொல்கிறது ஆய்வு -
சம காலத்தில் மது அருந்துதல் ஒரு நாகரிகமாகவே பல நாடுகளில் மாறிக்கொண்டு வருகின்றது.
இதனால் ஏற்படக்கூடிய கடுமையான ஆபத்துக்களை பல ஆய்வுகள் எடுத்துக்கூறியும் மதுவிற்கு அடிமையாதல் அதிகரித்துச் செல்கின்றது.
இவ்வாறான நிலையில் ஒருவர் மதுவிற்கு அடிமையாவதற்கு நான்கு வகையான காரணங்களே காணப்படுகின்றது என மற்றொரு ஆய்வு கூறுகின்றது.
அதில் ஒன்றாக சமூகமயமாதல் காணப்படுகின்றது.
அதாவது பல்வேறு நாடுகளுக்கிடையிலான தொடர்புகள் ஏற்படும்போது பல்கலாச்சாரப் பின்னணியில் தொடர்பை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் இருப்பதனால் மது அருந்த ஆரம்பித்து இறுதியில் அடிமையாகின்றனர்.
அதேபோன்று சில விஷயங்களை ஒத்துக்கொள்வதற்கும் குடிக்க ஆரம்பிக்கின்றார்களாம்.
அதாவது உண்மைகளை சொல்வதற்கு துணிவு வராதபோது துணிவை வரவழைக்க மது அருந்துவதை குறிக்கும்.
தவிர தம்மை சமூகத்தில் பெரிய ஆளாகக்காட்டிக் கொள்வதற்கும் மது அருந்த ஆரம்பித்து இறுதியில் முற்றாக அடிமையாகின்றனர்.
அதேபோன்று சில பிரச்சினைகளை சமாளிப்பதற்காகவும் மதுவிற்கு அடிமையாவதாக குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒருவர் மதுவுக்கு அடிமையாவதற்கு 4 காரணங்களே உண்டு: அடித்துச் சொல்கிறது ஆய்வு -
Reviewed by Author
on
February 27, 2018
Rating:
No comments:
Post a Comment