அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வரரை தரிசித்து விட்டு சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்


திருக்கேதீஸ்வரத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற வான் ஒன்று வவுனியாவிலிருந்து கற்பகபுரம் பகுதிக்கு சென்ற பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றைய மதியம்   இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பேருந்திலிருந்த பயணிகள் மூவரும், வானில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வானில் பயணித்தவர்கள் கொழும்பை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பதுடன், இதில், மூவர் கடுமையடைந்துள்ளதாக . வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்ததுள்ளது.
மேலும், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை  வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .




திருக்கேதீஸ்வரரை தரிசித்து விட்டு சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம் Reviewed by Author on February 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.