அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறாரா மலிங்கா? -


இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சாத்தியம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
லசித் மலிங்கா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘மன ரீதியாக கிரிக்கெட் விளையாடுவதை நிறைவு செய்துவிட்டேன். இனிமேலும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என நான் கருதவில்லை.
விரைவில் எனது ஓய்வு முடிவை நான் அறிவிக்க திட்டமிட்டுள்ளேன், இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் நான் இன்னும் பேசவில்லை.
நான் இலங்கை திரும்பியதும், எனது உடல் எவ்வாறு ஒத்துழைப்பு தருகிறது என்பதை தெரிந்து கொள்ள, உள்ளூர் போட்டிகளில் மீண்டும் கலந்து கொள்வேன்.

ஆனால், தற்போது நான் இனி ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவதும் முடிவுக்கு வந்துவிட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் புதிய அத்தியாயத்தை நான் துவங்க உள்ளேன்.
நான் இனிமேல் கிரிக்கெட் விளையாடாமல் கூட போகலாம்’ என தெரிவித்துள்ளார்.
மலிங்கா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறாரா மலிங்கா? - Reviewed by Author on February 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.