தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை! -
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இராமேஸ்வரம், பாம்பன் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதன் போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் இந்தப்பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது. உடனே இங்கிருந்து செல்லுங்கள் என்று மீனவர்களை எச்சரித்தனர்.
திடீரென்று அவர்கள் படகுகளில் ஏறி மீனவர்களை தாக்கினர். இதில் 50 பேர் காயம் அடைந்தனர். மேலும் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் சேதப்படுத்தினர்.
தொடர்ந்து இந்தப்பகுதியில் மீன் பிடிக்க வந்தால் சிறைபிடிக்கப்படுவீர்கள் என இலங்கை கடற்படையினர் மிரட்டினர்.இதனால் மீனவர்கள் அவசரமாக கரை திரும்பியுள்ளனர்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை! -
Reviewed by Author
on
February 07, 2018
Rating:
No comments:
Post a Comment