அண்மைய செய்திகள்

recent
-

மாலத்தீவுகளில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது -


மாலத்தீவுகளில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மாலத்தீவு அதிபர் Abdulla Yameen நேற்று மாலை 15 நாட்கள் நெருக்கடி நிலையை அறிவித்தார்.
மாலத்தீவின் தலைநகரான மாலியில் அமைந்துள்ள உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த ராணுவத்தினர் இரண்டு நீதிபதிகளையும், முன்னாள் அதிபரையும் கைது செய்தனர்.
மாலத்தீவு அதிபர் தனது அரசியல் எதிரிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் வைத்திருப்பது உலகறிந்த செய்தி. கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது.
முன்னாள் அதிபருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கையும் அது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறியது.
இதன் தொடர்ச்சியாகத்தான், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், முன்னாள் அதிபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவுகளில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது - Reviewed by Author on February 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.