நடராஜனின் உடல் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே நல்லடக்கம் -
உள்ளூர்வாசிகளும், அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர். ம. நடராஜனுக்கு சொந்தமான நிலம் விளாரில் உள்ளது. அங்குள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நடராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முதல் இணைப்பு- முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே நல்லடக்கம்
சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார்.இதனைத்தொடர்ந்து சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில், அரசியல் தலைவர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், நடராஜன் உடல் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பாமிங் செய்யப்பட்டு சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளாருக்கு இரவு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அருளானந்தம் நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு குடும்ப முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்படவிருக்கிறது.
நடராஜனுக்கு சொந்தமான நிலம் விளாரில் உள்ளது. அங்குள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நடராஜன் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளதாக திவாகரன் தெரிவித்துள்ளார்.
நடராஜனின் உடல் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே நல்லடக்கம் -
Reviewed by Author
on
March 22, 2018
Rating:
No comments:
Post a Comment