அண்மைய செய்திகள்

recent
-

ஸ்ரீதேவியை மனைவியாக நினைத்து வாழும் ரசிகர்:


ஸ்ரீதேவியை தனது மனைவியாக நினைத்து வாழ்ந்து வரும் ரசிகர் அவர் இறப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மரணம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து பலரும் இன்னும் மீளவில்லை.
இந்நிலையில் ஸ்ரீதேவியை உயிராக நேசிக்கும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ் மெரா என்ற ரசிகரை அவரின் மரணம் பெரிதும் பாதித்துள்ளது.
ஓம் பிரகாஷ் ஸ்ரீதேவியை தனது மனைவியாக நினைத்து பல காலமாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு இதுவரை 3000 கடிதங்களை எழுதியுள்ளார். பெற்ற தாய் இறந்த போது கூட தனது தலையை மொட்டையடிக்காத ஓம் பிரகாஷ், ஸ்ரீதேவியின் மரணத்துக்கு பின்னர் தனது தலையை மொட்டையடித்துள்ளதோடு சோகத்தில் உணவு எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்து வருகிறார்.

கடந்த 2002-ல் வாக்காளர் அடையாள அட்டையிலும் ஸ்ரீதேவியின் பெயரை ஓம் பிரகாஷ் சேர்த்துள்ளார்.
ஓம் பிரகாஷ் நண்பர் கூறுகையில், ஸ்ரீதேவியை சொந்த மனைவியாகவே நினைத்து பல ஆண்டுகளாக அவர் வாழ்ந்து வருகிறார்.
அவர் மீண்டும் மறுபிறவி எடுப்பார் என ஒம்பிரகாஷ் நம்புவதாக கூறியுள்ளார்.



ஸ்ரீதேவியை மனைவியாக நினைத்து வாழும் ரசிகர்: Reviewed by Author on March 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.