சர்வதேச விசாரனையை வழியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம்-(படம்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடை பெற்று வருகின்ற நிலையில் இலங்கைக்கு எதிரான் சர்வதேச விசாரனையை வழியுறுத்தியும், சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறையை வழியுறுத்தியும் இன்று வெள்ளிக்கிழமை(2) காலை மன்னாரில் கெயெழுத்து போராட்டம் இடம் பெற்றது.
-சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் இடம் பெற்று வருகின்ற கையெழுத்து போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை(2) காலை 10.30 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவின் மாவட்ட ஏற்பாட்டு குழு தலைவர் அந்தோனி சகாயம் தலைமையில் குறித்த கையெழுத்து போராட்டம் ஆராம்பமானது.
-இதன் போது காணாமல் போன,கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் , பொது மக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடை பெற்று வருகின்ற நிலையில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரனையை வழியுறுத்தியும், சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறையை வழியுறுத்தியும் கையெழுத்துக்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விசாரனையை வழியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம்-(படம்)
Reviewed by Author
on
March 02, 2018
Rating:
No comments:
Post a Comment