அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தினால் மரண தண்டனை: ஜனாதிபதி டிரம்ப் -


போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கிட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரியுள்ளார்.
அமெரிக்காவில் வலி நிவாரண போதை மாத்திரைகளுக்கு அதிக அளவிலான மக்கள் அடிமையாகி வருகிறார்கள், இதனை தடுக்கும் முயற்சியில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.

தற்போது சுமார் 2.4 மில்லியன் அமெரிக்கர்கள் போதை மருந்துக்கு அடிமையாக உள்ளனர். கடந்த 2016-இல் மட்டும் சுமார் 63,600 பேர் உயிரிழண்ட்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நியூ ஹாம்ஷர் மாநிலத்தில் பேசிய டிரம்ப், “ஓபியாட் உள்ளிட்ட போதை மாத்திரைகளால் பெரும் அளவு அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை நாம் சற்று கடுமையாக நோக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக போதை பொருள் கடத்தல்காரர்களை தூக்கிலடும் சட்டத்தை இயற்ற அரசு தரப்பில் முயற்சிகள் நடைபெற்று வருகிறது, ஆனால் அதற்கு அரசியல் மற்றும் சட்ட ரீதியிலான சிக்கல்கள் இருக்கின்றன.
அனைத்து எதிர்ப்புகளையும் மீறி விரைவில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தினால் மரண தண்டனை: ஜனாதிபதி டிரம்ப் - Reviewed by Author on March 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.