மன்னாரில் வேலையில்லாப்பட்டதாரிகள் புள்ளியடிப்படையின்றி நியமனங்கள் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்...VIDEOS
மன்னாரில் வேலையில்லாப்பட்டதாரிகள் புள்ளியடிப்படையின்றி நியமனங்கள் வழங்ககோரி ஆர்ப்பாட்டம் இன்று 27-04-2018 காலையில் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால்.....
மேற்படி நடைபெற்ற நேர்முகத்தேர்வில் புள்ளிகள் வழங்கப்பட்டு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வடமாகணத்தில் 20000 வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனர்.
மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டில் சுமார் 948 பட்டதாரிகள் உள்ளபோதும் முதல் கட்டமாக 515 பட்டதாரிகளுக்கும் இரண்டாம் கட்டமாக விடுபட்ட பட்டதாரிகள் அனைவருக்கும் நேர்முகத்தேர்வுகள் புள்ளிகளின் அடிப்படையில் நடைபெற்று முடிந்துள்ளபோதும் பெரும்பாலான பட்டதாரிககள் எதிர்பார்த்த புள்ளிகளைப்பெறாத பட்சத்திலும்.
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் விசேட கருத்தினை அதாவது ஏனைய மாவட்டங்களைப்போல் அல்லாமல் வடக்குகிழக்கு மாகாணங்களில் உள்ள பட்டதாரிகளுக்கு யுத்த கால சூழ்நிலையினை கருத்தில் கொண்டு விசேட தகமையின் கீழ் அனைவருக்கும் நியமனங்கள் வழங்கவேண்டும் என்ற கருத்தினையும் அத்தோடு புள்ளிகளை பாராமல்(அதாவது நாட்டின் அசாதரண சூழ்நிலையினால் பல சான்றிதழ்களை இழந்துள்ளோம் கவனத்தில் கொள்ளுங்கள்)
- 2012-03-31 ல் இருந்தும் நியமனங்கள் வழங்கப்படவில்லை அதனுடன் பல பட்டதாரிகள் வயது கூடிய நிலையில் உள்ளனர்
- இளம் பட்டதாரிகளும் உள்ளனர்-2016-2017 பட்டம்பெற்றவர்கள்
- ஆண்டு அடிப்படையில் பட்டதாரிகள் பட்டயச்சான்றிதழை கவனத்தில் கொண்டு நியமனங்களை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரினை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு பதிலாக பிரதமகணக்காளரும் மற்றும் நிர்வாக அதிகாரியிடமும் கையளித்தனர்.
மகஜரின் பிரதிகள் மாண்புமிகு ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண சபை உறுப்பினர்கள் என அனைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
-VMK-
மன்னாரில் வேலையில்லாப்பட்டதாரிகள் புள்ளியடிப்படையின்றி நியமனங்கள் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்...VIDEOS
Reviewed by Author
on
April 27, 2018
Rating:
No comments:
Post a Comment