அண்மைய செய்திகள்

recent
-

இராணுவ உடை அணிந்து ஏன் பத்ம பூஷன் விருதைப் பெற்றேன்: டோனி

இராணுவத்தின் கர்னல் உடை அணிந்து பத்ம பூஷன் விருது பெறும் பேது பத்து மடங்கு பெருமையை உணர்ந்ததாக டோனி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் வெற்றித் தலைவராக வலம் வந்தவர் டோனி. 37 வயதாகும் டோனியின் தலைமையில் தான் கடந்த 2007-ஆம் ஆண்டு இந்திய உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.

அப்போது அவருக்கு ராஜிவ் கேல் ரத்னா விருது கொடுக்கப்பட்டது. கடந்த 2009-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருந்தை டோனி பெற்றார்.
அதுமட்டுமின்றி கடந்த 2008 மற்றும் 2009-ஆம் அண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரருக்கான விருதையும், 2011-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலககிண்ணத்தையும் பெற்றுத் தந்தார். இப்படி சாதனை மேல் சாதனை படைத்த டோனிக்கு நேற்று இந்தியாவின் மூன்றாவது சிறந்த விருதான பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டது.

அப்போது டோனி இந்திய இராணுவத்தின் கவுரவ லெப்டினென்ட் கர்னல் உடையை அணிந்து வந்து விருதைப் பெற்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில் டோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கர்னல் உடையில் பத்ம பூஷண் விருது பெறும் போது 10 மடங்கு பெருமையாக உணர்ந்தேன்.

இந்த உடையில் இருக்கும் அனைத்து ஆண் மற்றும் பெண்களுக்கும் அவர்களின் குடும்பத்தாரின் தியாகத்துக்கும் நன்றி. நமது அடிப்படை உரிமைகளை சுதந்திரமாக பெற அவர்கள் தான் முக்கிய காரணம். ஜெய்ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார்.


இராணுவ உடை அணிந்து ஏன் பத்ம பூஷன் விருதைப் பெற்றேன்: டோனி Reviewed by Author on April 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.