ஐபிஎல் போட்டியை பார்க்கவிடாத தந்தையை அடித்துக்கொன்ற மகன்: அதிர்ச்சி சம்பவம் -
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த அண்ணாமலை (58) என்பவர் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி தொடர்களை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, வீட்டிற்கு வந்த இவரது மகன் நந்தக்குமார், நான் ஐபிஎல் போட்டி பார்க்க வேண்டும் அதனால் சேனலை மாற்றுமாறு கூறியுள்ளார்.
ஆனால், தந்தையோ சேனலை மாற்றாமல் தொலைக்காட்சி தொடர்களை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, வாக்குவாதம் கைகலப்பானதையடுத்து கோபம் கொண்ட நந்தக்குமார் கையில் கிடைத்த கட்டையை எடுத்து தந்தையை தாக்கியுள்ளார்.
இதில், தந்தை அண்ணாமலை ரத்தவெள்ளத்தில் சரிந்துள்ளார், தந்தை மயங்கி விழுந்ததும்,நந்தக்குமார் அங்கிருந்து ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அண்ணாமலையை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், தப்பி ஓடிய மகன்நந்தக்குமார் தேடிவருகின்றனர்.
ஐபிஎல் போட்டியை பார்க்கவிடாத தந்தையை அடித்துக்கொன்ற மகன்: அதிர்ச்சி சம்பவம் -
Reviewed by Author
on
April 12, 2018
Rating:
No comments:
Post a Comment