மன்னாரில் ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் போராளிகள்,பொது மக்களின் 32 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுஸ்ரிப்பு-(படம்)
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் போராளிகள் , பொது மக்களின் 32 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மன்னார் மாவட்ட தலைமை அலுவலகத்தின் ஏற்பாட்டில்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் குறித்த அஞ்சலி பொதுக்கூட்டம் இடம் பெற்றது.
குறித்த அஞ்சலி பொதுக்கூட்டத்திற்கு, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) செயலாளர் நாயகம் சிறிகாந்தா, வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் , குகதாஸ்,விந்தன் கனகரத்தினம், புவனேஸ்வரன், இலங்கை தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சிகளின் முக்கியஸ்தர்கள் , உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பல நூற்றுக்கனக்கானவர்கள் கலந்து கொண்டு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.குறிப்பாக வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு , மற்றும் யாழ் மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து நினைவு உரைகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் போராளிகள்,பொது மக்களின் 32 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுஸ்ரிப்பு-(படம்)
Reviewed by Author
on
May 06, 2018
Rating:
No comments:
Post a Comment