மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வில் த.தே.கூ உறுப்பினர்கள் 7 பேர் உற்பட 11 உறுப்பினர்கள் பகிஸ்கரிப்பு-(படம்)
மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை(3) காலை 10 மணியளவில் மன்னார் பிரதேச சபையில், மன்னார் பிரதேச சபையின் செயலாளர் திருமதி டி.எம்.வி.லோகு தலைமையில் இடம் பெற்ற போது குறித்த நிகழ்வை மன்னார் பிரதேச சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7 பேர் உள்ளடங்களாக 11 உறுப்பினர்கள் பகிஸ்கரித்துள்ளனர்.
மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை(3) காலை 10 மணியளவில் மன்னார் பிரதேச சபையில், மன்னார் பிரதேச சபையின் செயலாளர் திருமதி டி.எம்.வி.லோகு தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது விருந்தினர்களாக அமைச்சர் றிஸாட் பதியுதீன்,வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உள்ளடங்களாக மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மன்னார் பிரதேச சபை செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச சபைத் தலைவர் செல்லத்தம்பு, அட்டாளைச் சேனைபிரதேச சபை உறுப்பினர் அன்சில், முன்னாள் உப வேந்தர் கலாநிதி இஸ்மாயில், குருநகல் மாநகரசபை உறுப்பினர் அசார்தீன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதன் போது மன்னார் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 21 உறுப்பினர்களையும் வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
புதிய உறுப்பினர்கள்,மற்றும் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு, மன்னார் பிரதேச சபையின் செயலாளர் திருமதி டி.எம்.வி.லோகு தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றது.
மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக்கட்சி,ஈ.பி.டி.பி,தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் மற்றும் சிறிலங்கா முஸ்ஸீம் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் , உறுப்பினர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 2 பேர் உற்பட 11 உறுப்பினர்கள் குறித்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை(3) காலை 10 மணியளவில் மன்னார் பிரதேச சபையில், மன்னார் பிரதேச சபையின் செயலாளர் திருமதி டி.எம்.வி.லோகு தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது விருந்தினர்களாக அமைச்சர் றிஸாட் பதியுதீன்,வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உள்ளடங்களாக மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மன்னார் பிரதேச சபை செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச சபைத் தலைவர் செல்லத்தம்பு, அட்டாளைச் சேனைபிரதேச சபை உறுப்பினர் அன்சில், முன்னாள் உப வேந்தர் கலாநிதி இஸ்மாயில், குருநகல் மாநகரசபை உறுப்பினர் அசார்தீன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதன் போது மன்னார் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 21 உறுப்பினர்களையும் வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
புதிய உறுப்பினர்கள்,மற்றும் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு, மன்னார் பிரதேச சபையின் செயலாளர் திருமதி டி.எம்.வி.லோகு தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றது.
மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக்கட்சி,ஈ.பி.டி.பி,தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் மற்றும் சிறிலங்கா முஸ்ஸீம் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் , உறுப்பினர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 2 பேர் உற்பட 11 உறுப்பினர்கள் குறித்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வில் த.தே.கூ உறுப்பினர்கள் 7 பேர் உற்பட 11 உறுப்பினர்கள் பகிஸ்கரிப்பு-(படம்)
Reviewed by Author
on
May 03, 2018
Rating:
No comments:
Post a Comment