ஈரான் பாராளுமன்றத்தில் அமெரிக்க கொடி தீயிட்டு எரிப்பு -
ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.
ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் சாராம்சமாகும்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பதவி காலத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் தொடக்கம் முதலே இதை தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென குறித்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என நேற்று டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
டிரம்பின் அறிவிப்புக்கு ரஷ்யா, சிரியா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஒபாமாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டிரம்பின் அறிவிப்பு ஈரானை மிகவும் கொதிப்படைய செய்த நிலையில் அது அந்நாட்டின் பாரளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது.
அதன்படி பாரளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவின் கொடியை கிழித்தும், எரித்தும் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஈரானின் அணு ஆயுத ஒப்பந்த நகலும் பாராளுமன்றத்தில் எரிக்கப்பட்டது.
இதோடு அமெரிக்காவுக்கு மரணம் என அங்கிருந்த உறுப்பினர்கள் குரலெழுப்பினார்கள்.
பாரளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி, பிரச்சனைகளை சமாளிக்கும் அளவுக்கு போதுமான மனநலத்திறன் டொனால்டு டிரம்பிடம் இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரான் பாராளுமன்றத்தில் அமெரிக்க கொடி தீயிட்டு எரிப்பு -
Reviewed by Author
on
May 09, 2018
Rating:
No comments:
Post a Comment