அண்மைய செய்திகள்

recent
-

தமிழினப் படுகொலை வாரம் செம்மணியில் நேற்று ஆரம்பம்

தமிழினப்படுகொலை வாரத்தின் முதலாம் நாள் நினைவு நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் செம் மணியில் ஆரம்பமாகியுள்ளன.

இந்த நிகழ்வுகள் நேற்றுக் காலை 10 மணியளவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தலை மையில் ஆரம்பமாகியுள்ளன.

இதே போன்று மிருசுவில், முழங்காவில் மற்றும் மன்னார் உயிலங்குளத்திலும் நினைவு நிகழ்வுகள் நேற்றைய தினம் நடை பெற்றுள்ளன.

மேலும் இன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு வவுனியா பண்டாரவன்னியன் நினைவிடத்திலும், 14-ம்,
15-ம் திகதிகளில் யாழ்குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் குறிப்பாக வடமராட்சி, தென்மராட்சி பகுதிக ளிலும் நெடுந்தீவில் இடம்பெற்ற குமுதினி படுகொலை ஆகியவற்றுக்கான அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெறும்.

16-ம், 17-ம் திகதிகளில் அம்பாறை, மட் டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேச ங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும்.

இதனை தொடர்ந்து இறுதி நாளான மிகப் பெரிய தமிழின படுகொலை இடம்பெற்ற மே 18-ம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் காலை 10.30 மணிக்கு வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழினப் படுகொலை வாரம் செம்மணியில் நேற்று ஆரம்பம் Reviewed by Author on May 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.