பிரித்தானியாவின் Beachy Head பகுதியில் 10 சடலங்கள் கண்டெடுப்பு! -
East Sussex-ன் Beachy Head கடற்கரை பகுதியில், 500 அடி ஆழத்தில் பாறைகளின் இடர்பாடுகளுக்கு இடையே மனித உடல் ஒன்று தென்படுவதாக நேற்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் 40 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை மீட்டனர்.
அதேசமயம், கடற்கரையின் மற்றொரு பகுதியில் இரண்டு மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. கடல் பகுதியில் ஒருவரின் உடலும், மலையடிவாரத்தில் ஒருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று, Taylor என்பவர் தன்னுடைய நாயுடன் கடற்கரை பகுதியில் நடைபயணம் மேற்கொள்ளும்பொழுது, விமான டிக்கெட், செல்போன் மற்றும் ஒரு பை இருப்பதை கண்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபடும்பொழுது 20 வயதுள்ள இரண்டு ஆண்களின் சடலங்களை மீட்டனர். அதில் ஒருவர் நார்வேயிலிருந்து தற்கொலை செய்துகொள்வதற்காகவே வருகை தந்துள்ளார் என்பது, அவரது பாஸ்போர்ட், செல்போன் மற்றும் விமான டிக்கெட்டை வைத்து காவல்துறையினர் உறுதி செய்தனர்.
இதேபோல கடந்த வாரம் Cheryl Tompsett (42) மற்றும் அவரது மகன் லியோவின் உடல்கள் இருவேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. அதனால் இருவரின் இறப்பு கொலையா? தற்கொலையா என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த புதன்கிழமையன்று, கடற்கரையின் மற்றொரு பகுதியில் 58 வயதுள்ள ஆண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருக்கும்பொழுதே உடைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலமும், அதனை தொடர்ந்து 40 நிமிடத்தில் மற்றொரு ஆணின் சடலமும் மீட்கப்பட்டது.
மிகவும் பிரபலமான கடற்கரை பகுதியில் இரண்டு வாரங்களில் 10 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது, பொலிஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Beachy Head பகுதியில் 10 சடலங்கள் கண்டெடுப்பு! -
Reviewed by Author
on
June 27, 2018
Rating:
No comments:
Post a Comment