அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் 5 பேர் பலி, 20 பேர் படுகாயம் -பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு:


அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் பிரபலமான பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

மேரிலாந்து மாகாணத்தில் உள்ள அனாபொலிஸ் நகரில் செயல்பட்டு வரும் Capital Gazette பத்திரிகை அலுவலகத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டுமின்றி துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Capital Gazette பத்திரிகை மீது விரோதம் கொண்ட நபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என பேசப்படுகிறது.
தற்போது பால்டிமோர் மற்றும் நியூயார்க் நகர பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் உள்ளூர் ஊடகங்கள் பல எண்ணிக்கையை தெரிவிக்கின்றன. ஆனால் 5 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் ஒருவரே பலமுறை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதால் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், காயமடைந்தவர்கள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை எனவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



அமெரிக்காவில் 5 பேர் பலி, 20 பேர் படுகாயம் -பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: Reviewed by Author on June 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.