அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரை அழகு படுத்தும் வேலைத்திட்டத்தில் அனைவரும்-நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன்-படம்


 மன்னார் நகர சபையின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து மக்களை ஒன்று சேர்த்து மன்னார் நகரத்தை அழகு படுத்தும் வேலைத்திட்டத்தில் ஈடுபட வேண்டும்.எதிர்வரும் காலங்களில் அபிவிருத்தி பணிகளுக்கு அப்பால் நாங்கள் மன்னார் நகரத்தை அழகு படுத்தும் விடையத்திற்கு முன் வர வேண்டும் என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 4 ஆவது கூட்டம் இன்று புதன் கிழமை (20) காலை 10.30 மணியளவில் நகர சபையின் சபா மண்டபத்தில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது தலைமை உரை ஆற்றுமையிலேயே மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,

மன்னார் நகரத்தை அழகு படுத்தும் விடையத்திற்கு முதற்கட்டமாக ஒரு திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும்..

-மன்னார் நகர சபையின் ஒவ்வெரு உறுப்பினர்கள் ஊடாகவும் 10 பேரை தெரிவு செய்து 160 பேர்கள் ஊடாக மன்னார் நகரத்தை அழகு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

-மேலும் திணைக்களங்களினூடாகவும் மக்களை சேர்த்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
மன்னார் நகர சபையின் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் ஏற்கனவே நகர சபை திட்டமிட்ட வரவு செலவுத்திட்டங்களுக்கு அமைவாகவே எமது திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சக உறுப்பினர்களின் பங்களிப்புடன் அனைத்து திட்டங்களும் சிறந்த முறையில் நடைமுயைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து  மன்னார் நகர சபையின் செயலாளர்  எக்ஸ்.எல்.லெம்பேட் அவர்களினால் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டதோடு,சபை உறுப்பினர்களினால் பிரேரணைகளும் முன் வைக்கப்பட்டது.

இதன் போது மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து சபை உறுப்பினர்களினால் சபையில் முன் வைக்கப்பட்டது.

வீதி புனரமைப்பு தொடர்பாக பல்வேறு கிராமங்களில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும் புதிய வீதியை அமைக்க முடியாது விட்டாலும் சேதமடைந்துள்ள வீதிகளை கிரவல் மண் போட்டு செப்பணிட வேண்டிய நிலை உள்ளது.
பல்வேறு வீதிகளில் தெரு மின் விளக்குகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

எனவே தேவைகளை அறித்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மன்னார் நகர சபையினால் கிராமங்களில் முன்னெடுக்கப்படுகின்ற வேளைத்திட்டங்கள் அனைத்தும் குறித்த கிராமங்களை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்களினூடாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கிராமங்களுக்கு வழங்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் சம பங்கீடுகளுடன் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கையினை முன் வைத்தனர்.

மேலும் மன்னார் நகர சபையின் உறுப்பினர்கள் ஒவ்வெருவருக்கும் தமது வட்டார ரீதியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள இவ்வருடத்திற்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிதியாவது ஒதுக்கீடு செய்தால் கிராமங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






மன்னார் நகரை அழகு படுத்தும் வேலைத்திட்டத்தில் அனைவரும்-நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன்-படம் Reviewed by Author on June 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.