மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்.....
மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொன்டனர்
இன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலகத்திற்கு முன் ஓன்று கூடிய 100க்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொன்டனர் குறித்த ஒன்று கூடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகள்.
கடந்த மாதங்களில் இடம் பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நோர்முக தோர்வுக்கு சென்ற பட்டதாரிளுக்கே இன்னமும் புள்ளிகள் அறிவிக்கப்படாத நிலையில் அத்தோடு நியமனம் வழங்கப்படாத நிலையில் அரசாங்கத்தினால் அடுத்த கட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நோர்முக தோர்வுக்கான வர்த்தாகமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அத்துடன் கடந்த மாதம் மன்னார் மாவட்டத்துக்கு மட்டும் என பிரத்தியோகமாக 86 பட்டதாரிகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருப்பதாகவும் அது சம்மந்தமாக பொறுப்பான அதிகாரிகள் தங்களுக்கு எந்தவித அறிவித்தல்களும் வழங்கவில்லை எனவும் இது பட்டதாரிகள் மத்தியில் பாரிய மன உளைச்சளை ஏற்படுத்தியிருப்பதாகவும் தொரிவித்த வேலையற்ற பட்டதாரிகள் இது தொடர்பாக அரசாங்கத்துக்கு ஒரு அழுத்தம் ஒன்றை வழங்க வேண்டும் எனவும் அரசாங்கம் புள்ளி அடிப்படையில் இல்லாமல் வருடத்தின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கவேண்டும்.
எனவும் மன்னார் மாவட்டத்திற்கு மாத்திரம் கடந்தமாதம் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கை தொடர்பான உண்மை தன்மையை அறிவதற்கும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்பதற்காகவும் குறித்த கலந்துரையாடல் எற்பாடு செய்யப்பட்தாகவும் தெரிவித்தனர்.
இவ் கலந்துரையாடலின் பின்னர் அனைத்து பட்டதாரிகளும் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பாகவும் 86 பட்டதாரிகளை உள்ளடக்கிய அறிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.
வேலையில்லாப்படதாரிகள் மிகவும் மனவுளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் இதுவரை பொறுப்பான அதிகாரிகள் பொற்ப்பான பதில் சொல்லவில்லை எமக்கான நல்ல தீர்வை பொறுப்பாணவர்களிடம் இருந்து எதிர்பார்கிகின்றோம்.
மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்.....
Reviewed by Author
on
June 20, 2018
Rating:
No comments:
Post a Comment