மனித எலும்பு அகழ்வு பணி தொடர்கின்றது: ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க இடையூறு -
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று 17 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுடன் இணைந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளின் போது மனித எச்சங்கள் மற்றும் தடயப்பொருட்கள் என்பன தொடர்ந்தும் மீட்கப்பட்டு வருகின்றது.
குறித்த அகழ்வு பணிக்காக மேலதிக உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டு அகழ்வு பணியில் இணைக்கப்பட்டு அகழ்வுபணிகள் இடம் பெற்று வருகின்றது.
குறித்த அகழ்வு பணிகளின் போது முதலில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமான முறையில் தமது பணியை மேற்கொண்டு வந்தனர்.
அதனைத்தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அகழ்வு பணிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேர அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது ஊடகவியலாளர்கள் சுதந்திரமான முறையில் புகைப்படம் மற்றும் வீடியோபதிவுகளை மேற்கொள்ள அதிகாரிகள் இடையூறை ஏற்படுத்தியுள்ளனர்.
இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் வழங்கப்பட்ட நேரத்திற்கு அமைவாக ஊடகவியலாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய சென்ற போது விசேட சட்ட வைத்திய நிபுணரினால் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகழ்வின் போது முழுமையாக காணப்பட்ட மனித எலும்புகளை அருகில் சென்று புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய அனுமதிக்காததோடு, அகழ்வு பணிக்கு சற்று தூரத்தில் நின்று புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யும் படி தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த அகழ்வு பணிகள் தொடர்பிலும் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் மற்றும் தடயப்பொருட்கள் தொடர்பிலும் உண்மை விபரங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை என ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மனித எலும்பு அகழ்வு பணி தொடர்கின்றது: ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க இடையூறு -
Reviewed by Author
on
June 21, 2018
Rating:
No comments:
Post a Comment