அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் தாயகத்திலிருந்து ஜெனீவா சென்ற வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் -


தமிழர் தாயகத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 38ஆவது கூட்டத்தொடரிற்காக ஜெனீவா சென்றடைந்துள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி (நேற்றுமுன் தினம்) தொடக்கம் ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
தமிழீழம், தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து தமிழர் இயக்கம் பல இராசதந்திர வேலைத்திட்டங்களையும், கருத்தரங்குகளையும் ஜெனீவா மற்றும் ஐ.நா மனித உரிமைகள் சபையை மையப்படுத்தி நடத்தி வருகின்றது.
இதன்போது, தாம் தாயகத்தில் எதிர் நோக்கிய மற்றும் இன்றும் எதிர் நோக்கும் அவலங்களையும், இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்பு சார் இனவழிப்பினையும் சர்வதேச சமூகத்தின் முன் தமிழர் தாயகத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் பறைசாற்றவுள்ளனர்.

மேலும், தமிழர் இயக்கம் இதற்காக பல பக்கவறை நிகழ்வுகள், நாடுகளுடனான சந்திப்புக்கள் மற்றும் பிரதான அவையில் உரையாற்றும் ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.
தமிழர் தாயகத்திலிருந்து ஜெனீவா சென்ற வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் - Reviewed by Author on June 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.