மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் நடாத்தப்பட்ட இப்தார் நிகழ்வு (படம்)
கறிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் மன்னார் மறைமாவட்டத்தில் பல வகையான மனிதாபிமான செயற்பாடுகள் நடை பெற்று வருகிறது. இதில் சமயங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புச் செயற்பாடாக சர்வமத சகவாழ்வு செயற்பாடுகள் என்ற தலைப்பில் நடாத்தப்பட்டு வருகின்றது.
இச்செயற்பாட்டின் இலக்குக் கிராமங்களில் ஒன்றான அளவக்கை றசூல் புதுவெளி ஜும்மா பள்ளியிலகடந்த புதன் கிழமை இப்தார் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
இதில் மும்மத மக்களும் கலந்து கொண்டதுடன் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகள் கலந்து கொண்டு சர்வமத சகவாழ்வு தொடர்பான சிறப்புரை ஆற்றியதுடன் நோன்பின் சிறப்புத் தொடர்பாகவும் மும்மத மக்களுக்கும் தெளிவுபடுத்தினார்.
அத்துடன் கரிற்றாஸ் தேசிய நிலைய பணியாளர்களான அருட்சகோதரி துசாரி பெனாண்டோ மற்றும் மு.வாரீஸ் வரன் குமாரசாமி ஆகியோரும்,அளவக்கைப் பங்குத்தந்தை அருட்பணி சுரேந்திரன் றெவ்வல் அடிகளாரும், வாழ்வுதய நிர்வாக அலுவலர் மற்றும் பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நானாட்டான் பிரதேசசபை தவிசாளர் பரஞ்சோதி பிரதேசசபை உறுப்பினர்.ராசிக் , றசூல்புதுவெளி பள்ளி மௌலவி ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் சர்வமத ஒன்றிய பிரதி நிதிகளும் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வு சமுகத்தில் சமய ஒன்றிப்பையும் சமுக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
- மன்னார் நிருபர்-
இச்செயற்பாட்டின் இலக்குக் கிராமங்களில் ஒன்றான அளவக்கை றசூல் புதுவெளி ஜும்மா பள்ளியிலகடந்த புதன் கிழமை இப்தார் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
இதில் மும்மத மக்களும் கலந்து கொண்டதுடன் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகள் கலந்து கொண்டு சர்வமத சகவாழ்வு தொடர்பான சிறப்புரை ஆற்றியதுடன் நோன்பின் சிறப்புத் தொடர்பாகவும் மும்மத மக்களுக்கும் தெளிவுபடுத்தினார்.
அத்துடன் கரிற்றாஸ் தேசிய நிலைய பணியாளர்களான அருட்சகோதரி துசாரி பெனாண்டோ மற்றும் மு.வாரீஸ் வரன் குமாரசாமி ஆகியோரும்,அளவக்கைப் பங்குத்தந்தை அருட்பணி சுரேந்திரன் றெவ்வல் அடிகளாரும், வாழ்வுதய நிர்வாக அலுவலர் மற்றும் பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நானாட்டான் பிரதேசசபை தவிசாளர் பரஞ்சோதி பிரதேசசபை உறுப்பினர்.ராசிக் , றசூல்புதுவெளி பள்ளி மௌலவி ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் சர்வமத ஒன்றிய பிரதி நிதிகளும் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வு சமுகத்தில் சமய ஒன்றிப்பையும் சமுக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
- மன்னார் நிருபர்-
மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் நடாத்தப்பட்ட இப்தார் நிகழ்வு (படம்)
Reviewed by Author
on
June 08, 2018
Rating:
No comments:
Post a Comment