அண்மைய செய்திகள்

recent
-

மீனவர்களை விரட்டியடித்த கடற்படையினர்!


கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், ஆறுகாட்டுத்துறை பகுதியிலிருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் படகுகளில் எட்டு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்நிலையில், கோடியக்கரையின் தென்கிழக்கே மீன்பிடித்தபோது, அப்போது ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

இதன்போது மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இலங்கை கடற்படையின் எதிர்பாராத தாக்குதலால் அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக அங்கிருந்து கரைக்கு திரும்பியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களை விரட்டியடித்த கடற்படையினர்! Reviewed by Author on June 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.