மன்னார் நானாட்டான் வாழ்க்கைப் பெற்றான் கண்டல் தூய நீக்கிலார் ஆலயத்தின் அர்சிப்புவிழா....
மன்னார் நானாட்டான் அளவக்கைப் பங்கின் துணை ஆலயமான வாழ்க்கைப் பெற்றான் கண்டல் தூய நீக்கிலார் ஆலயப் பங்குச் சமூகம் ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு 17.06.2018 மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு வரவேற்ப்பளித்ததோடு, புதிதாக அமைக்கப்பட்ட தூய நீக்கிலார் ஆலயத்தையும் மன்னார் ஆயர் அவர்கள் ஆசீர்வாதித்து, திருச்சபையின் திரு வழிபாட்டு திருமரபிற்கேற்ப ஆரம்ப வழிபாடுகளை முன்னெடுத்து, ஆலயம், திருப்பீடம், நற்கருணைப் பேழை ஆகியவற்றை முறைப்படி அர்சித்துப் புனிதப்படுத்தினார்.
சிறப்பாக சர்வமததலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்
பங்குத் தந்தை அருட்பணி.லீ.சுரெந்திரன் றெவல் அடிகளார் ஆலய இறைமக்கள் சமூகத்தோடும், பணியாற்றும் துறவிகளோடு இணைந்தும் புதிய ஆலய அமைப்புப் பணியையும், இத் திருநிகழ்வையும் மிகவும் சிறப்பாக ஒழுங்கமைத்துடன் புனிதரின் ஆசியைபெற அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் இறைமக்கள் பங்குச்சமூகம் ஒன்று கூடி ஆசிபெற்றனர்.
சிறப்பாக சர்வமததலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்
பங்குத் தந்தை அருட்பணி.லீ.சுரெந்திரன் றெவல் அடிகளார் ஆலய இறைமக்கள் சமூகத்தோடும், பணியாற்றும் துறவிகளோடு இணைந்தும் புதிய ஆலய அமைப்புப் பணியையும், இத் திருநிகழ்வையும் மிகவும் சிறப்பாக ஒழுங்கமைத்துடன் புனிதரின் ஆசியைபெற அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் இறைமக்கள் பங்குச்சமூகம் ஒன்று கூடி ஆசிபெற்றனர்.
மன்னார் நானாட்டான் வாழ்க்கைப் பெற்றான் கண்டல் தூய நீக்கிலார் ஆலயத்தின் அர்சிப்புவிழா....
Reviewed by Author
on
June 20, 2018
Rating:
No comments:
Post a Comment