அண்மைய செய்திகள்

recent
-

"2018-ம் ஆண்டிற்கான சிறந்த பிரித்தானிய இந்தியர்" விருதை வென்ற 8 வயது சிறுவன்!


பிரித்தனியாவின் Birmingham-ல் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில், 2018-ம் ஆண்டிற்கான சிறந்த பிரித்தானிய இந்தியர் என்ற விருதினை 8 வயது சிறுவன் பெற்றுள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரை பூர்விகமாக கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் விஷ்வநாத். அவரது மகன் ஈஸ்வர் சர்மா (8), கென்ட் பகுதியிலுள்ள St Michael's Preparatory School-ல் படித்து வருகிறார். இவர் சமீபத்தில் பிரித்தானியாவின் Birmingham-ல் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில், இளம் சாதனையாளர் பிரிவில், "2018-ம் ஆண்டிற்கான சிறந்த பிரித்தானிய இந்தியர்" விருதினை வென்றுள்ளார்.

ஈஸ்வர் கடந்த ஜூன் மாதம் கனடாவில் நடைபெற்ற World Student Games 2018-ல் தனிப்பட்ட மற்றும் நவீன யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.

இதுகுறித்து ஈஸ்வர் கூறுகையில். நான் எப்போதும் ஒரு யோகா மாணவனே. என்னுடன் ஞானத்தை பகிர்ந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

ஈஸ்வரின் சாதனைகள் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை அவன் ஊக்குவிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என ஈஸ்வர் தந்தை விஸ்வநாத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

"2018-ம் ஆண்டிற்கான சிறந்த பிரித்தானிய இந்தியர்" விருதை வென்ற 8 வயது சிறுவன்! Reviewed by Author on July 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.