அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு அறநெறிக் கல்வி விழிப்புணர்வு

இந்துசமய கலாச்சார அமைச்சின் செயல்திட்டத்தின் கீழ் இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம்  நிகழ்வாக...

மன்னாரில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் இந்து சமய அறநெறிக்  கல்வி விழிப்புணர்வு நிகழ்வு வண்ணாகுளம் அம்பார் ஆலய பிள்ளையார் ஆலயத்தில் 01-07-2018 இன்று காலை  9-30 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆண்டாகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து வண்ணாகுளம் அம்பார் ஆலய பிள்ளையார் ஆலயத்தில் நிறைவு பெற்றது.

மதிப்பிற்குரிய மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு.கேதீஸ்வரன் மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலைகளின் தலைவர் மஹ ஸ்ரீ தர்மகுமாரகுருக்கள் உபதலைவர் நடேசானந்தன் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு.ப.ஜெயக்குமார் வண்ணாகுள கிராமசேவகரும் சிவசிவபூமி இந்து இளைஞர் அமைப்பின் தலைவருமான ஸ்ரீஸ்கந்த ராஜா
அன்னை இல்லத்தின் காப்பாளர் திரு எஸ் பிரிந்தவனநாதன்,
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்  மாவடட செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி ஆ ஜீவிதா தலைமையில்
ஞானவைரவர் அறநெறிப்பாடசாலை வட்டக்கண்டல்
வண்ணாகுளம் சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலை ஆலயம்  பிரமசக்தி சபை ஆதவன்  அறநெறிப்பாடசாலை மற்றும் ஆலயம் என்பன இணைந்து நடாத்தியது.
 இந்து சமய அறநெறிக் கல்வி  அவசியம் பற்றி மாணர்களுக்கு விழிப்புணர்வு தெளிவுரை வழங்கியதோடு பரிசுகளும் வழங்கப்பட்டது.

















மாந்தை மேற்கு அறநெறிக் கல்வி விழிப்புணர்வு Reviewed by Author on July 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.