அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தேசிய அணியில் யாழ். இளைஞர்!


பத்தொன்பது வயதிற்குட்பட்ட இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த போட்டி ஹம்பந்தோட்ட மகிந்த ராஜபக்ஸ மைதானத்தில் ஆரம்பாகியுள்ளது. இன்றைய போட்டியில், யாழ் மத்திய கல்லுரியின் மாணவரான விஜாஸ்காந் இலங்கை அணியில் அறிமுகமாகியுள்ளார்.

சிறந்த சுழல்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஷ்காந் தொடர்ச்சியாக மேல், வடமத்திய மற்றும் வடமேல் மாகாண அணிகளுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில், பத்தொன்பது வயதிற்குட்பட்ட இந்திய அணிக்கு எதிரான தொடரில் இடம்கிடைத்திருந்தது.
அந்த வகையில், இன்றைய போட்டியில் வியாஷ்காந் தனது துல்லியமான பந்துவீச்சால் இரண்டு ஓட்டமற்ற ஓவர்கள் அடங்களாக ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசிய அணியில் யாழ். இளைஞர்! Reviewed by Author on July 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.