அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் பால் உற்பத்திசார் தொழிற்சாலையை அமைக்குமாறு கோரிக்கை -


கிளிநொச்சி மாவட்டத்தில் பால் உற்பத்தி கணிசமான அளவில் உயர்ந்துள்ள போதிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு பால் சார் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்காதிருப்பது கவலைக்குரியதே. இவ்வாறு ஒரு பால் சார் உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்குவதன் மூலம் பலர் வேலைவாய்ப்பை பெற முடிவதுடன் பண்ணையாளர்களையும் ஊக்குவிக்க முடியும்.

எனினும் இது தொடர்பில் மாகாண சபை இவ்வளவு காலமும் நடவடிக்கை எடுக்காததையிட்டு கவலையடைவதுடன் இனிவரும் காலங்களிலாவது உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் அழுத்தமான கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

கிளிநொச்சி அரச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெளசர்கள் மூலம் வன்னியிலிருந்து தென்னிலங்கைக்கு பசுப்பாலை கொண்டு சென்று அங்கிருந்து பக்கட்டுகளில் (Packet) பால்மாவை அனுப்புகிறார்கள்.

உள்ளூர் உற்பத்திகளை சரியான முறையில் நாங்களே பயன்படுத்தக்கூடியவாறு சாதாரண தொழிற்சாலைகளையாவது அமைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் பால் உற்பத்திசார் தொழிற்சாலையை அமைக்குமாறு கோரிக்கை - Reviewed by Author on July 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.