மன்னாரில் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் ஒரு வராத்திற்கு இடை நிறுத்தம்-(படம்)
மன்னார் 'சதொச' வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் எதிர் வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
-கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வரை குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்றது.
தற்போது வரை 52 நாட்கள் அகழ்வுப்பணிகள் இடம் பெற்றுள்ளதோடு 66 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தது.
அவற்றில் 56 மனித எலும்புக்கூடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ச்சியாக குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வந்தது.
சனி , ஞாயிறு , மற்றும் அரச விடுமுறை தினங்களில் மாத்திரம் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை(13) முதல் எதிர் வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை வரை அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகழ்வு பணிகள் எதற்காக இடை நிறுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பில் காரணம் தெரிவிக்கப்படவில்லை.
குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் நிர்மானிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது.
குறித்த மண்ணை கொள்வனவு செய்த மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள குடியிறுப்பாளர் ஒருவர் தனது வீட்டிற்கு முன் கொட்டி வீட்டு வளாகத்தினுள் மண்ணை அள்ளி கொட்டிய போது சந்தேகத்திற்கு இடமான எலும்புகள் காணப்பட்ட நிலையில் அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இந்த நிலையில் மார்ச் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 3 நாட்கள் அப்போது மன்னார் நீதவானாக கடமையாற்றிய ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் வீட்டில் கொட்டப்பட்ட மண் பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டது.
மேலும் குறித்த மண் கொட்டப்பட்ட இடங்களிலும் பரிசோதனை இடம் பெற்றது.
இதனைத்தொடர்ந்து சந்தேகத்திற் கிடமான எலும்புகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டது.
இந்த நிலையில் 'லங்கா சதொச' விற்பனை நிலையத்தின் கட்டுமானப்பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
-கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வரை குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்றது.
தற்போது வரை 52 நாட்கள் அகழ்வுப்பணிகள் இடம் பெற்றுள்ளதோடு 66 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தது.
அவற்றில் 56 மனித எலும்புக்கூடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ச்சியாக குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வந்தது.
சனி , ஞாயிறு , மற்றும் அரச விடுமுறை தினங்களில் மாத்திரம் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை(13) முதல் எதிர் வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை வரை அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகழ்வு பணிகள் எதற்காக இடை நிறுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பில் காரணம் தெரிவிக்கப்படவில்லை.
குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் நிர்மானிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது.
குறித்த மண்ணை கொள்வனவு செய்த மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள குடியிறுப்பாளர் ஒருவர் தனது வீட்டிற்கு முன் கொட்டி வீட்டு வளாகத்தினுள் மண்ணை அள்ளி கொட்டிய போது சந்தேகத்திற்கு இடமான எலும்புகள் காணப்பட்ட நிலையில் அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இந்த நிலையில் மார்ச் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 3 நாட்கள் அப்போது மன்னார் நீதவானாக கடமையாற்றிய ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் வீட்டில் கொட்டப்பட்ட மண் பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டது.
மேலும் குறித்த மண் கொட்டப்பட்ட இடங்களிலும் பரிசோதனை இடம் பெற்றது.
இதனைத்தொடர்ந்து சந்தேகத்திற் கிடமான எலும்புகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டது.
இந்த நிலையில் 'லங்கா சதொச' விற்பனை நிலையத்தின் கட்டுமானப்பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
மன்னாரில் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் ஒரு வராத்திற்கு இடை நிறுத்தம்-(படம்)
Reviewed by Author
on
August 15, 2018
Rating:
No comments:
Post a Comment