அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலய உற்சவவிழா-மிகவும் சிறப்பாக இடம்பெற்றது

அலங்கார உற்சவவிழா-20-07-2018 தொடங்கி   நடைபெற்று 30-07- 2018 திருவிழா சிறப்பாக இடம்பெற்றது அத்துடன்  கற்பகவிநாயகப்பெருமான் வீதி உலா வந்து பக்தகோடிகளுக்கு அருளாசிகள் வழங்கினார்.

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கை திருநாட்டில் மாதோட்டம் எனும் மன்னார் நகரிலே அமைந்துள்ள திருக்கேதீச்சரப்பதியில் அமைந்துள்ள கள்ளியடி கற்பக பிள்ளையார்,இலக்குமி தாயார் பாலமுருகன்,நவநாயகர் வைரவர்,சண்டீஸ்வரர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு  நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆடி மாதம் 04ம் நாள் அஷ்டமி திதியும் சித்திரை நட்சத்திரமும் சுபயோக சுபதினத்தில் 20-07-2018 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் ஆரம்பமாகி தினமும் புண்ணியாக வாஜனம்-கணபதி ஹோமம்-விஷேட கும்பபூஜை அபிஷேகமும் இடம்பெற்று விஷேட பூஜை பிரசாதம் வழங்கல் இடம்பெறும்.

மாலை விஷேட பூஜை வசந்த மண்டப பூஜையுடன்,விநாயகப்பெருமான் உள்ளகவீதி வெளிவீதி உலா தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும் அத்துடன் ஒவ்வொரு நாளும் அன்னதானம் வழங்கப்படும்.

ஆரம்பம்-20-07-2018
பூர்த்தி -29-07-2018

பிரதிஷ்ட பிரதம குரு
சிவஸ்ரீ தியாக கருணானந்தக்குருக்கள்
(பிரதமகுரு.திருக்கேதீச்சர திருத்தலம்.)

ஆலயகுருக்கள்
சிவபதி.த.சத்தியானந்த குருக்கள்
திருக்கேதீச்சரம்.

மங்கள வாத்தியம்
திரு.பா.பாலசுந்தர் குழுவினர்
திருக்கேதீச்சரம்.

பூமாலை
திரு.S.சிவசந்திரன்
திருக்கேதீச்சரம்


ஆலய பரிபாலனசபை
கற்பகவிநாயகர் ஆலயம்
-கள்ளியடி-

























மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலய உற்சவவிழா-மிகவும் சிறப்பாக இடம்பெற்றது Reviewed by Author on August 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.