கேரளா கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம்: ஆயர் பிராங்கோ கைது -
கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி அளித்த புகாரின் அடிப்படையில் இவரை தற்காலிகமாக நீக்குவதாக வாடிகன் தலைமை நேற்று அறிவித்தது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஆயராக பணியாற்றியவர் பிராங்கோ.
அங்கு பஞ்சாபை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, இவர் வன்புணர்வு செய்ததாக, அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்தார்.
இருப்பினும் ஆயர் பிராங்கோ மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததை அடுத்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக எஞ்சிய கன்னியாஸ்திரிகள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில் கடும் கோரிக்கைக்கும், காவல்துறை மீதான விமர்சனங்களுக்கு பின்பும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் விவகாரம் தொடர்பில் இந்தியாவில் கைதாகும் முதல் ஆயர் பிராங்கோ என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம்: ஆயர் பிராங்கோ கைது -
Reviewed by Author
on
September 22, 2018
Rating:
No comments:
Post a Comment