அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இன்றைய தினம் மனித எலும்புக்கூட்டு அகழ்வு பணி நிறுத்தம்-


மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக இடம் பெற்று வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி இன்று (10) திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை 67 தடவைகள் அகழ்வுகள் இடம் பெற்றது.
சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதினால் இன்று திங்கட்கிழமை(10) காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

-ஆனால் இன்றைய தினம் அகழ்வு பணிகள் இடம் பெறவில்லை. குறிப்பாக சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் ஆகியோர் அங்கு செல்லவில்லை.
-இதன் காரணமாக அகழ்வுகள் இடம் பெறவில்லை.

இதுவரை குறித்த வளாகத்தில் 120 மனித எலும்புக்கூடுகள்; அடையாளம் காணப்பட்டதுடன் 114 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மன்னாரில் இன்றைய தினம் மனித எலும்புக்கூட்டு அகழ்வு பணி நிறுத்தம்- Reviewed by Author on September 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.