அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வட்டக்கண்டலில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு உதைப்பந்தாட்ட சுற்று-(படம்)



மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டக்கடண்டல் கிராமத்தில் கடந்த 1985 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 35 ற்கும் அதிகமான அப்பாவி பொது மக்களை நினைவு கூர்ந்து வட்டக்கண்டல் சுடரொலி விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த அணிக்கு 9 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று நேற்று   ஞாயிற்றுக்கிழமை(9) மாலை வட்டக்கண்டல் மைதானத்தில் இடம் பெற்றது.

இறுதிச் சுற்றிற்கு தெரிவான ஆண்டாங்குளம் சென்.தோமஸ் அணியினருக்கும், முத்தரிப்புத்துறை சென்.ஜோசப் அணியினருக்கும் இடையில் இடம் போட்டி பெற்றது.

இதன் போது 2-0 என்ற அடிப்படையில் ஆண்டாங்குளம் சென்.தோமஸ் விளை யாட்டு அணியினர் வெற்றி பெற்று வெற்றிக்கேடையத்தை சுவீகரித்துக் கொண்டனர்.




மன்னார் வட்டக்கண்டலில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு உதைப்பந்தாட்ட சுற்று-(படம்) Reviewed by Author on September 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.