அண்மைய செய்திகள்

recent
-

மாபெரும் புகைப்படப்போட்டி-"நாம் உணரா எம்வளம் / நாம் காக்க மறக்கும் எம் வளம்"


மொறட்டுவைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் பெருமையுடன் நான்காவது வருடமாக நடாத்தும் மாபெரும் புகைப்படப்போட்டி 'ஒளிச்சுவடு - 2018'

தலைப்பு - "நாம் உணரா எம்வளம் / நாம் காக்க மறக்கும் எம் வளம்"

பரிசுகள்
முதல் பரிசு - 25,000 /=
இரண்டாம் பரிசு - 20,000 /=
மூன்றாம் பரிசு - 15,000 /=

புகைப்படப்போட்டிக்கான விதிமுறைகள்-
• ஏற்கெனவே போட்டிகளில் பங்குபற்றி பரிசுகளை வென்ற அல்லது வணிக விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒளிப்படங்கள் அனுப்பப்படலாகாது.
• புகைப்படங்கள் யாவும் புகைப்படக் கலைஞருக்கு சொந்தமானவையாகவும் தலைப்புக்கு பொருத்தமானதாயும் இருத்தல் அவசியம்.
• ஒருவர் ஆகக்கூடியது மூன்று படங்கள் அனுப்பமுடியும்.
• கைதொலைபேசி ஊடக எடுக்கபட்ட புகைப்படங்களும் அனுமதிக்கப்படும்.
• ஒளிப்படம் ஒன்றின் ஆகக்கூடிய RESOLUTION 5Mp
• மிகையான ஒளிச்சேர்க்கை மற்றும் நிறச்சேர்க்கை செய்யப்பட்ட படங்கள் போட்டியிலிருந்து நீக்கப்படும்.
• நீங்கள் அனுப்பும் படங்கள் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகுமிடத்து அவற்றின் மூலப்பிரதியை அனுப்பிவைக்குமாறு கோரப்படுவீர்கள்.

உங்கள் புகைப்படங்களை thamizhiyam@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு 15.10.2018 க்கு முன்னர் அனுப்பிவைக்கவேண்டும்.
மின் அஞ்சலில் புகைப்படத்துடன் பின்வருவனவற்றை இணைத்தல் வேண்டும்.
• முழுப்பெயர்
• தொலைபேசி இலக்கம்
• தற்போதைய முகவரி
• புகைப்படத்திற்கான சிறியகுறிப்பு அல்லது தலைப்பு

மாபெரும் புகைப்படப்போட்டி-"நாம் உணரா எம்வளம் / நாம் காக்க மறக்கும் எம் வளம்" Reviewed by Author on September 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.