மன்னார்க்கு விஜயம்...மத நல்லிணக்கத்திற்கான சர்வமத குழு...படங்கள்
மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தினால் நடை முறைபடுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வமத செயற்பாடுகளின் ஒரு பகுதியான மதத்தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு வெள்ளி கிழமை 12-10-2018 மாலை 4.00 மணியளவில்; வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் மன்னார் வாழ்வுதயம் பொதுமண்டபத்தில் இடம் பெற்றது.
இவ் நிகழ்வுக்கு விசேட அழைப்பை ஏற்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலந்து கொண்டார் அவருடன் இணைந்து குறித்த நிகழ்வில் சிலாபத்தை சோர்ந்த மும் மதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வமத பிரதி நிதிகள் மற்றும் மன்னார் மாவட்ட சர்வமத பிரதி நிதிகள் அரச ஊழியர்கள், மற்றும் ஏனைய சர்வ மத பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சமய தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கான அறிமுக நிகழ்வும் அதனை தொடரந்து கருத்துக்களை பரிமாரிக் கொள்ளும் நிகழ்வும் இறுதியில் பொது கலந்துரையாடல்களும் இடம் பெற்றது.
இன்றைய நிகழ்வின் மேலதிக செயற்பாடாக சர்வமத செயற்திட்டத்தின் நோக்கம் தொடர்பாகவும், கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மூலம் அடையப்பட்ட விளைவுகள் தொடர்பான கலந்துரையாடல் நடாத்தப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளுக்கான திட்டமிடலும், ஆலோசனையும் இடம் பெற்றது.
12-10-2018 இன்றை தினம் வருகை தந்த சர்வமத குழுவினர் 13-10-2018 நாளைய தினம் மன்னார் மவட்டத்தில் மத ரீதியாக பிரசித்தி பெற்ற இடங்களை தரிசிக்கவுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி மத சின்னங்கள் இனம் தொரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டு வருகின்ற நிலையில் மத தலைவர்களிடம் ஒற்றுமை இல்லாத பட்சத்தில் மத நல்லிணக்கமானது சிதைவடைய கூடிய வாய்ப்பு காணப்படுகின்ற படியினால் இவ்வாறான சர்வமத நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் அவசியம் என்பது குறிப்பிடதக்கது.
மன்னார்க்கு விஜயம்...மத நல்லிணக்கத்திற்கான சர்வமத குழு...படங்கள்
Reviewed by Author
on
October 13, 2018
Rating:
No comments:
Post a Comment