அண்மைய செய்திகள்

recent
-

பார்வையாளர்களை அவமரியாதையாக பேசும் மன்னார் வைத்திய சாலை ஊழியர்கள் -காவலாளிகள்.

மன்னார் வைத்திய சாலையில் இன்றய தினம்28-11-2018 பார்வையாளர் நேரத்தின் பொழுது நிருவாகத்தின் திடீர் முடிவின் படி பார்வையாளர்களுக்கான அனுமதி அட்டை  கொண்டு வந்தவர்கள் மாத்திரமே உள்ளே செல்ல முடியும் எனவும் அவ்வாறு பார்வையாளர் அட்டை பெறாதவர்கள் உள்ளே  நுழைய முடியாது எனவும் கூறப்பட்டது

இதன்போது ஏன் இதை நீங்கள் மக்களுக்கு முன்னர் அறிவிக்கவில்லை எனவும் இதை ஒரு துண்டுப் பிரசுரம் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும் என கேள்வி எழுப்பிய மக்கள் நாங்கள் தூர இடங்களில் இருந்து வந்திருக்கின்றோம் இவ்வாறான முறை நடைமுறை படுத்த வேண்டும் என்றால் அது நோயாளர் விடுதிக்கு முன் செயற்படுத்தலாமே ஏன் இவ்வாறு பிரதான வாயிலில் நிறுத்துகிண்றீர்கள்  இதனால் நாங்கள் செல்ல முடியாத நிலை இருக்கின்றது எனவும் அவர்களிடம் கேட்டனர்
எவ்வாறு கேள்விகளை எழுப்பிய மக்கள் மீது அங்கிருந்த ஊழியர்கள்  தவறான முறையிலும் தாங்கள் வைத்திய சாலை சீருடையில் இருக்கின்றோம் எங்களோடு  அதிகம் கதைத்தால் அனைவரையும் போலீசாரிடம் ஒப்படைப்போம் என்று தகாத முறைகளில் பேசிய வீடியோ ஆதாரம் இருக்கின்றது

இவ்வாறு பார்வையாளர்களை அவமரியாதையாக ஊழியர்கள் பேசுவதினாலேயே மன்னார் வைத்திய சாலைக்கு வரும் பார்வையாளர்கள் அவர்களுடன் முரண் பட வேண்டிய நிலை இருக்கின்றது இதனை கேள்வி கூட கேற்க முடியாத நிலைக்குத்தான் இன்றய மன்னார் மக்களின் நிலை இருக்கின்றது.

இன்று நடைபெற்ற நிகழ்வின் வீடியோ ஆதாரம் இதனோடு இணைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களை அவமரியாதையாக பேசும் மன்னார் வைத்திய சாலை ஊழியர்கள் -காவலாளிகள். Reviewed by Author on November 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.